கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஈச்சன்விளை பகுதியில் திமுகவினர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செய்த பின், இரவில் மர்ம நபர்கள் அந்த படத்தை சேதப்படுத்தி அவமரியாதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அந்த பகுதியில் குவியத் தொடங்கியதால் பதட்டமும் பரபரப்பும் நிலவியது. இதனையடுத்து திமுகவினர் ஏராளமானோர் குலசேகரம் காவல் நிலையத்தில் திரண்டு அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களிடம் புகாரினைப் பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்