நாளை மறுநாள் முதல் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வெயில் மற்றும் அனல் காற்றினால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்து பலத்த காற்று வீசுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மீனவர்கள் வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?