கிருமிநாசினிகளை உடலில் செலுத்தி கொரோனாவுக்கு சிகிச்சையளிக்குமாறு தாம் நையாண்டித்தனமாகவே கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகிலேயே அமெரிக்காதான் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 52 ஆயிரம் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், பாதிப்பு அதிகரித்துவாறே இருக்கிறது.
இந்நிலையில் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், புறஊதா கதிர் ஒளிக்கற்றை வெப்பம் மூலமாகவும், கிருமிநாசினிகளை உடலில் செலுத்திக்கொள்வதன் மூலமாகவும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறியிருந்தார். அமெரிக்க அதிபரின் இந்த அபாயகரமான அறிவுரை அந்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும் அதிர வைத்தது.
இதனால் பதறிப்போன கிருமிநாசினி தயாரிப்பு நிறுவனங்களும், மருத்துவர்களும் கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்துவது மிகவும் அபாயகரமானது என்று எச்சரிக்கை விடுத்தனர். பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த கருத்து பற்றி விளக்கம் அளித்துள்ள ட்ரம்ப், தாம் அந்த அறிவுரையை கூறியது நையாண்டித்தனமாகவே என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?