தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களில் 98 விழுக்காட்டினர் அறிமுகமானவர்களாலேயே அந்தக் கொடுமைக்கு ஆளாகியுள்ளது குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
53 வழக்குகளில் குடும்ப உறுப்பினர்களே குற்றவாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாம் வாழும் புவியையும், நாட்டையும் தாயின் பெயரால் அழைத்து வந்தது தமிழ்ச் சமூகம். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, மகளாக, பேத்தியாக ஆணின் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒரு வகையில் தொடர்கிறாள் பெண். அவளை உறவாக ஏன் உயிராகக் கூட மதிக்காமல் வெறும் உடலாய் மட்டுமே பார்க்கும் சில ஆண்களைப் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.
அதன்படி 2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 98.6 விழுக்காடு குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமானவர்கள்தான். அதிலும் 53 பேர் குடும்ப உறுப்பினர்கள்.
ஆணும் பெண்ணும் மனிதம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி விடுகிறார்கள். மற்றவரை பாதிக்காததே மனிதம். அப்படியாயின் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காதவரே மனிதர்.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!