காஞ்சிபுரம் கோவிலில் மாரடைப்பால் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்ததாக ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜர் கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் ஆந்திராவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஆட்சியர் பொன்னையா, காவல்துறையினர் தாக்கியதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றார். அதேவேளையில், ஆட்டோ ஓட்டுநர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்பி சந்தோஷ் தெரிவித்தார்.
முன்னதாக, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தி வரதரை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இதனால் அந்த இடம் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க வந்த ஆந்திர இளைஞர் உயிரிழந்துள்ளார். சக்தி ஆகாஷ் என்ற அந்த இளைஞர் பெண் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. காஞ்சி வரதராஜர் கோயிலில் உள்ள தங்கப்பல்லியை செல்போனில் படம் பிடித்தபோது, பெண் காவலர் தாக்கியதாக இளைஞரின் பெறோர் புகார் கொடுத்திருந்தனர். இதற்கிடையே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல்துறைக்கு எதிராக கோயில் அருகே தீக்குளித்து உயிரிழந்தார்.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?