சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரே நாளில் 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை சீதாம்பாள் காலனியில் உள்ள சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். வழிப்பறிப்பின்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய சாந்தா, சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்படாத நிலையில், குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் வாகன பதிவெண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஐஸ் ஹவுஸ், கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் சுமார் 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ராயப்பேட்டையில் வழிப்பறி முயற்சி நடந்துள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும், காவல்துறையிடம் சிக்குவோம் எனத் தெரிந்தும் இதுபோன்ற தொடர் வழிப்பறி சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'