வறட்சியால் 120 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வருடம் கூட உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் வறட்சி நிலவுவதாகவும் விவசாயிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வறட்சியால் 120 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார். வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நிதி உதவி பெற்ற ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக கருதி நிதியுதவி கோரும் மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை