தமிழக அரசின் பிடியை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது, அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். தனது பிறந்தநாள் அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்திரா காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதத்திற்கு "நீதிக்கான போராட்டம்" என பெயரிடப்பட்டது. சந்திரபாபு நாயுடு அமைச்சரவையை சேர்ந்த 13 பேர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினர். இது குறித்து சந்திரபாபு நாயுடு பேசுகையில் " மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அதுபோன்றதை எப்போதும் நடக்க விடமாட்டேன். மத்திய அரசுடனான இந்தப் போராட்டம் என் சுயநலம் அல்ல, மாநில நலத்துக்கானது" என்றார் அவர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!