ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் ஏற்கனவே தனது வேட்புமனுவினை தாக்கல் செய்துவிட்டார். இதனிடையே புதிய தலைமுறையிடம் நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய இயக்குநர் அமீர், “தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அப்படி நின்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, பிறகு முடிவெடுப்பேன்” என கூறியிருந்தார்.
இதனிடையே ஆர்.கே நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அமீர் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்போம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார். அமீருக்கும் தனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனவும் சீமான் கூறினார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இயக்குநர் அமீர் கூறியுள்ளார். மேலும், தனது அரசியல் பயணம் சமூக அநீதிகளை எதிர்த்து போரிடுவதாகவே இருக்கும், நடிகரை எதிர்ப்பது அல்ல என்று அமீர் தெரிவித்தார்.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?