முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் ப.சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிபிஐ காவலில் உள்ளார். இதனிடையே, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் 26ஆம் தேதி (நேற்று) வரை சிதம்பரத்தை கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறையினர் கைது செய்வதற்கான தடை முடிவடைந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய நாளை வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, வழக்கில் நாளை மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வரை விசாரணை நடைபெறும்.
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு