வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.