திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ் குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார்.
முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.
2008ல் வெளியான `Twenty:20' படத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமலிருந்த மோகன்லால் - மம்மூட்டி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.