நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் (இன்று) நிறைவுபெற்றது. இதையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை சில ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை இங்கு அறியலாம்.
இந்தியா டுடே, சி.என்.என்., நியூஸ் 18, ஏ.பி.பி., சி.ஓட்டர் ஆகிய ஊடகங்கள் தெரிவித்திருந்த கருத்துக்கணிப்பில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவுக்கு 1-2 இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதுபோல் அதிமுகவுக்கு 1-2 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் வெற்றி குறித்து எந்த ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளை தெரிவிக்கவில்லை.
திமுக - 33-37
அதிமுக - 0-2
பாஜக - 2-4
பிற - 0
திமுக - 36-39
அதிமுக - 2
பாஜக - 1-3
பிற - 0
திமுக - 37-39
அதிமுக - 0
பாஜக - 2
பிற - 0
திமுக - 37
அதிமுக - 0
பாஜக - 2
பிற - 0
திமுக - 34-38
அதிமுக - 1
பாஜக - 5
பிற - 0
திமுக - 35
அதிமுக - 0
பாஜக - 2
பிற - 0