தமிழகத்தில் பருவகால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சளி, இருமல் பாதிப்புகளுக்கு பின், தலைவலி, உடல்சோர்வு, காய்ச்சல் பாதிப்புகள் தொடர்வதால், வைரஸ்களில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வை, பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.