”மேரேஜ் பண்ணிக்கலாம்; ஆனா..” வரிசையாக ஏமாந்த பெண்கள்.. மோசடி பணத்தில் 'ப்ளே ஸ்கூல்' நடத்திய நபர்!

மேட்ரிமோனியல் மூலம் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடிசெய்து, 'ப்ளே ஸ்கூல், 'மிளகாய் பொடி நிறுவனம்' தொடங்கிய மோசடி மன்னன் சிக்கியது எப்படி?
மோசடி செய்த நபர்
மோசடி செய்த நபர்PT

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

மேட்ரிமோனியல் இணையதளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஐ.ஐ.டி.,யில் பட்டமேற்படிப்பு படித்த நபரை சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

என்ன நடந்தது?

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கணவனை இழந்து பள்ளிபடிக்கும் மகனோடு தனியாக வாழ்ந்து வரும் பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

புகாரில் “சில மாதங்களுக்கு முன்பாக மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக கார்த்திக் என்ற நபர் தொடர்பு கொண்டார். அவருக்கும் திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும், உங்களை திருமணம் செய்து கொள்வதுமாக கூறி மோசடி செய்துவிட்டார்.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

குறிப்பாக, தனது பத்து வயது மகனை, தனது மகன் போல் பார்த்துக் கொள்வதாகவும், திருமணம் செய்து கொண்டு இருவரையும் அமெரிக்கா அழைத்துச் செல்வதாக கூறி, அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்ல விசா எடுப்பதற்காக ரூபாய் 5 லட்சம் பணம் அனுப்புமாறு கேட்டதன் பெயரில், கார்த்திக் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினேன். சில தினங்கள் கழித்து மீண்டும் வேறு காரணத்திற்காக பணம் கேட்டதால் சந்தேகம் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவர் குறித்து சோதனை செய்தபோது அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது” என்று புகாரில் கூறியுள்ளார்.

மோசடி செய்த நபர்
”சிறுவயதில் 10ரூ கிடைக்காதா என்று இருந்தேன்..” - குறைவான சம்பளம் குறித்து துறவியை போல் பேசிய ரிங்கு!

லோக்கல் அக்கவுண்டுக்கு சென்ற பணம்!

இதனையடுத்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அந்த வங்கிக் கணக்கு விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

இதனையடுத்து அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய காதலர் பிரசாந்த் என்பவர் அமெரிக்காவின் டிஃபன்ஸ் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணிபுரிந்து வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு நபர் தனக்கு பணம் தர வேண்டும் எனவும் தன்னிடம் இந்திய வங்கி கணக்கு இல்லை என்பதால் தன்னிடமிருந்து வங்கிக் கணக்கை வாங்கி கொடுத்ததாகவும், பின்னர் அதில் ரூபாய் 5 லட்சம் பணம் வந்ததையும் அந்த பெண், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மோசடி நபர்
மோசடி நபர்

மேலும், ரூபாய் 5 லட்சத்தில் மூன்று லட்ச ரூபாயை வளசரவாக்கத்தில் உள்ள மற்றொரு நபருக்கு அனுப்ப வேண்டும் என தனது காதலர் கூறியதன் பேரில் மூன்று லட்ச ரூபாய் பணம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

மோசடி செய்த நபர்
’Toss போடுவதில் ஏமாற்றிய MI?’ முதல் ‘கைக்கொடுக்காமல் சென்ற தோனி’ வரை! 2024 IPL-ன் டாப் 5 சர்ச்சைகள்!

ஒரு பெண்ணிடமிருந்து மற்றொரு பெண்..

இதனையடுத்து வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கை ஆய்வு செய்து பார்த்தபோது, அது மற்றொரு இளம்பெண்ணுக்கு சொந்தமானதை அறிந்தனர்.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, பிரசாந்த் ஆனந்த் என்ற தனது காதலர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதாகவும், மேட்ரிமோனியில் இணையதள மூலமாக அறிமுகமாகி சில மாதங்களில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் இருந்து மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்வதாக கூறி சுமார் 4 லட்சம் பணம் பெற்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து மொத்தமாக சுமார் 7 லட்சம் பணப்பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

மோசடி செய்த நபர்
’பணம் வேஸ்ட்.. இவங்களாம் தேர மாட்டாங்க?’ சர்ச்சையை தாண்டி மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மாறிய 5 வீரர்கள் ஏலம்!

80 லட்சம்.. சிக்கிய மோசடி மன்னன்!

மேலும், மிளகாய் பொடி வியாபாரத்திற்காக ஹரிஹரன் என்ற நபர் மூலமாக பணம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹரிஹரன் என்ற நபரை பின் தொடர்ந்து இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வந்த நபரை கைது செய்தனர்.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்ட போது தென்காசி TNHB காலனி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் குமார் துரை (40) என்பதும், அவர் பி.டெக், எம்.டெக், எம்.எஸ் ஆகிய பட்டப்படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படித்துள்ளதும் தெரியவந்தது.

மோசடி நபர்
மோசடி நபர்

பட்டம் மேற்படிப்பை படித்துவிட்டு கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் டேட்டா அனலைஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிறகு தமிழகம் திரும்பி கடந்த நான்கு ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மேட்ரிமோனியல் மூலமாக அறிமுகமாகி, ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

மோசடி செய்த நபர்
“நீங்க ஒரு ஜோக்கர்..” கோலி குறித்து சர்ச்சை பேச்சு! நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்திய பீட்டர்சன்!

கிட்ஸ் ப்ளே ஸ்கூல் ஆரம்பித்த மோசடி நபர்!

மோசடி செய்யப்பட்ட பணத்தில் தென்காசியில் தனது வீட்டு அருகே Smart kids Fun School என்ற சிறுவர்களுக்கான 'கிட்ஸ் ஸ்கூல்' நடத்திவருவது தெரியவந்தது. மேலும் 'அம்மாவின் கைவண்ணம்' என்ற பெயரில் மிளகாய்பொடி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

மேட்ரிமோனியல் இணையதளத்தில் கார்த்திக், கார்த்திக் சந்திரன், பிரசாந்த் ஆனந்த், பிரசாத் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் கிடைக்கும் அழகான ஆண் நபர்கள் புகைப்படத்தை எடுத்து அதன் மூலமாக இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம்பறித்து வந்ததும் தெரியவந்தது.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

குறிப்பாக அமெரிக்காவில் தான் பணிபுரிந்த போது அமெரிக்க மொபைல் நம்பர்களில் நான்கு whatsapp கணக்குகளை உருவாக்கி இருப்பதும், அதனை தற்போது வரை செயல்பாட்டில் வைத்துக் கொண்டு பெண்களிடம் பேசும்போது அமெரிக்க நம்பர் கொண்ட வாட்ஸ் அப் எண்ணில் இருந்து கால் செய்து பேசி அவர்களை நம்ப வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

மோசடி செய்த நபர்
'KKR கோப்பை வென்றிருக்கலாம்.. ஆனால் நாம்தான்' தோற்ற SRH வீரர்களிடம் நம்பிக்கையாக பேசிய காவ்யா மாறன்!

மோசடிக்கு இதான் காரணம்!

IIT.,யில் எம்.டெக் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை காதலித்ததாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் அந்த பெண் தன்னை விட்டு சென்றுள்ளார் எனவும், அதனால் பெண்களிடம் மட்டுமே மோசடி செய்து வருவதாகவும் போலீசாரிடம் கைது செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் குமார் துரை தெரிவித்துள்ளார்.

மேட்ரிமோனியல் மோசடி
மேட்ரிமோனியல் மோசடி

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்த ஜார்ஜ் குமார் துரை, இன்னும் எத்தனை பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் விசராணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோசடி செய்த நபர்
குபீர் மொமண்ட்| இவ்ளோ பண்ணியும் அவுட் பண்ண முடியலேயே! ஒரு பந்துக்கு ஓடும் 11 சிறுவர்கள்! #ViralVideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com