மும்பையில் கனமழையால் நீரில் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியது. இதனால் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் அதிகனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழையால் வடமாநிலங்கள் தத்தளிக்கும் நிலையில், அதன் தீவிரம் அதிகமாகலாம்.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.