ஒரு க்ரைம் இன்வஸ்டிகேஷன் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன். பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை மையப்படுத்தி சொல்லி இருக்கும் கருத்துக்களும் கவனிக்க வேண்டியவை.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவர் எழுதிய பல க்ரைம் நாவல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது இவரது நாவலின் கதையை மையமாக வைத்து ‘ரேகை’ என்ற த்ரில்லர் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.