இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகளை ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவ சங்க அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும்வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.