மதுரையில் நடைபெற்ற WOW MADURAI நிகழ்ச்சி முறையான ஏற்பாடு இல்லாததால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது. கடும் தள்ளுமுள்ளு நெருக்கடியில் சிக்கி பெண்கள் மயக்கமடைந்ததால் நிறுத்தம்.
உசிலம்பட்டி அருகே சுமார் 40 லட்சம் ரூபாய் கிராம பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பணப் பெட்டிக்கு சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கில் முக்கிய உத்தரவு.
மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பழமையான கட்டடத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.