கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வு பெற்றிருக்கும் ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கி மீண்டுவந்துள்ள ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாகவும், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.