irans president was injured in israels assassination plot
Masoud PezeshkianREUTERS

'அமெரிக்காவின் கடற்படை முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது' - ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்து வரும் நிலையிலும், தனது நாட்டின் துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் கடற்படை முற்றுகையானது, வாஷிங்டனின் “இராணுவ நடவடிக்கைகளின் நீட்சியாகவே” செயல்படுவதாக ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
Published on
Summary

ஹார்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு முரணான இராணுவ நடவடிக்கையின் நீட்டிப்பு என அதிபர் மசூத் பெசெஷ்கியான் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த முற்றுகை பிராந்திய அமைதியை குலைத்து, கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்து, விலையை பீப்பாய்க்கு 126 டாலருக்கும் மேல் உயர்த்தியதாகவும், அமெரிக்கா நிலைப்பாடு மாற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தோல்வியில் முடியும் என எச்சரித்து, அதை சர்வதேச சட்டங்களுக்கு முரணான நடவடிக்கை என ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் கண்டித்தார். ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பிராந்திய அமைதியை பாதிக்கும் என்றும், இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் பெசஷ்கியான் கூறினார்.

iran - Hormuz
iran - Hormuzweb

ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை, “இராணுவ நடவடிக்கையின் நீட்டிப்பு” என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

irans president was injured in israels assassination plot
"அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் சொத்துகள்.." - ஈரான் உச்ச தலைவர்

உலகின் அமைதிக்காக ஈரான் தொடர்ந்து சகிப்புத்தன்மையைக் காட்டி வருவதாகவும், ஆனால் அமெரிக்காவின் இந்த அடக்குமுறை அணுகுமுறையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், இது பிராந்தியத்தில் நிலையான அமைதியைக் குலைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Ships stranded near Hormuz
Ships stranded near Hormuz X

இந்த முற்றுகை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய்க்கு 126 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. ஈரான் தனது சுதந்திரத்திற்காகவே இந்த விலையைச் செலுத்துவதாகவும், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் பெசெஷ்கியன் தெளிவுபடுத்தியுள்ளார்.

irans president was injured in israels assassination plot
ஈரானின் ’மாரடைப்பு ஆயுதம்’.. அச்சத்தில் எதிரி நாடுகள்.. வெளியேறும் US போர்க் கப்பல்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com