“உன் மகனைக் கொலை செய்யப் போகிறேன்” - இளைஞரின் தாயிடமும் கூறிவிட்டு கொலை செய்த நபர் கைது!

ஒடுக்கத்தூரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திக்
கைது செய்யப்பட்ட கார்த்திக்PT WEB

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள ஓங்கப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் கௌதமன் (19). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கும் புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மது போதையில் வாய்த் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த    கௌதமன்
உயிரிழந்த கௌதமன்

இந்நிலையில் கார்த்திக் மற்றும் கௌதமன் இருவரும் நேற்று ஒன்றாக மது குடிக்கச் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கார்த்திக்
“சுத்திகிட்டே இருக்கோம்..” - கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம்!

இதில் கெளதமனின் அம்மாவிற்கு போன் செய்த கார்த்தி "உன்னோட மகனைக் கொலை செய்யப் போகிறேன்" எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கௌதமனின் அம்மா மற்றும் உறவினர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, கௌதமன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வந்த போலீசார் கௌதமனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக்
தெலங்கானா: அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com