புதுக்கோட்டை | ஆம்புலன்ஸிலேயே பிறந்த குழந்தை.. தாய், சேய் நலம் காத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணியை மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அதிக பிரசவ வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவமாகியுள்ளது. பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
baby born
baby bornputhiathalaimurai

புதுக்கோட்டை - தஞ்சை எல்லை கிராமமான ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி கல்விக்கரசி (24) கருவுற்று இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது துவார் கிராமம் அருகே கல்விக்கரசிக்கு அதிக பிரசவவலி ஏற்பட்டு ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

baby born
’சேரி’ வார்த்தைப் பதிவு: எதிர்ப்பு கிளம்பிய நிலையில் குஷ்பூ கொடுத்த அடடே விளக்கம்!

2 கிலோ எடையில் பிறந்த சேயும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டான சூழலில் தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர், மற்றும் ஓட்டுநர் வெங்கடாசலபதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com