காமராஜர் - திருச்சி சிவா
காமராஜர் - திருச்சி சிவாweb

”காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான்..” - திருச்சி சிவா எம்பி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்தான திமுக எம்பி திருச்சி சிவாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. கட்சி பேதம் கடந்து, அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் காமராஜருக்கு மரியாதை செய்தனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசத்தொடங்கினார்.

திருச்சி சிவா
திருச்சி சிவாதிருச்சி சிவா

அதில், ” காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும் . அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். ”

கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு "நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினார்.” என்று திருச்சி சிவா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் தான் பேசியது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை திருச்சி சிவா வெளியிட்டுள்ளார்.

காமராஜர் - திருச்சி சிவா
”கட்டுக்கதைகளாலேயே காமராஜர் வீழ்த்தப்பட்டார்!” - திமுக மீது காங். எம்பி ஜோதிமணி காட்டம்

காமராசர் மீது மதிப்பு கொண்டுள்ளேன் - திருச்சி சிவா

கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

காமராஜர் மீது மதிப்பு கொண்டுள்ளேன்:திருச்சி சிவா
காமராஜர் மீது மதிப்பு கொண்டுள்ளேன்:திருச்சி சிவா

“குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!” என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!

இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

காமராஜர் - திருச்சி சிவா
"காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை”- செல்வப்பெருந்தகை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com