"எனக்கும் என் மகன் மீதான புகாருக்கும் எந்த சம்பந்தம் இல்லை" - பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ விளக்கம்!

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், வீட்டில் வேலை செய்த , பெண் ஒருவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், "எனக்கும் என மகனுக்கும் சம்பந்தம் இல்லை" என எம்.எல்.ஏ. கருணநிதி விளக்கம் அளித்துள்ளார்.
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி,  
ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மார்லினா
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மார்லினாPT WEP

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் அவரது மனைவி மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுமி அளித்துள்ள வன்கொடுமை புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 12ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி, மேற்படிப்பு படிக்கவைக்க முடியாத நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் மூலம் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

வீட்டு வேலைக்கு சேர்ந்த சிறுமி கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருப்பதாக சிறுமி தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, சிறுமி பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். தனது மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்த செல்வி, அது குறித்து காரணம் கேட்கவும், ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் அடித்து துன்புறுத்தியதை தாயிடம் அழுதபடி சொல்லி இருக்கிறார்.

மறுநாள் காலை, தனது மகளின் காயங்களுக்கு மருத்துவம் செய்வதற்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தாய் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மதிவாணன் அவரது மனைவி மெர்லினாமீது புகார் அளிக்கப்பட்டது.

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி,  
ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மார்லினா
வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து, பட்டியலின சிறுமியை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணநிதி
பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணநிதி

ஆபாசமாக பேசுதல், குழைந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், குழைந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி,  
ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மார்லினா
வேலைக்கு வந்த பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: பல்லாவரம் MLA-வின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

இச்சம்பவம் தொடர்பாக பேசிய பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணநிதி, "என் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு, தற்போது நான் குரோம்பேட்டையில் வசித்து வருகிறேன். நான் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். அவர்கள் திருவான்மியூரில் உள்ளனர். எனக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி விட்டேன். அவர்கள் நினைத்தால் வருவார்கள், நான் எப்போதாவது அவர்களை பார்க்க செல்வேன். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அதனால் அத பற்றி பேச நான் விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் இருந்து தவறு செய்திருந்தால் நான் பொறுப்பேற்கலாம். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் நான் தலையிட விரும்பவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com