அதே இடம்... அதே பேருந்து.. மாணவியை தூக்கி வீசிய தனியார் பேருந்து... கோவை சோகம்

கோவை கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கல்லூரி மாணவியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பேருந்து விபத்து
பேருந்து விபத்துபுதியதலைமுறை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம்மாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வையாபுரி மற்றும் வசந்தி தம்பதியினர். இவர்களது மூன்றாவது மகள் தேவதர்ஷினி சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார் தேவதர்ஷினி. அப்போது சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக சென்ற தேவ தர்ஷினி மீது மோதியதில் அவர் சாலையோரமிருந்த புதரில் தூக்கி வீசப்பட்டார்.

இதில் காயமடைந்த தேவதர்ஷினியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தேவதர்ஷினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி காவல்துறையினர் , பேருந்தை பறிமுதல் செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மாதம் இந்த தனியார் பேருந்து இதே இடத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பேருந்து விபத்து
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் ஏகனாபுரம் மக்கள் போராட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com