முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை

மிக்ஜாம் மீட்பு பணி - “ஓரணியாய் திரள கரம் கூப்பி அழைக்கிறேன்.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னையில் மிக்ஜாம் புயல் கோரதாண்டவம் ஆடியுள்ளது. இந்நிலையில் தற்போது மழை குறைந்து வருகிறது. இருப்பினும் புயல் ஏற்படுத்திய தாக்கம் குறைய, இன்னும் சில தினங்கள் ஆகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
EXCLUSIVE | “இயற்கையை எப்படி சரியாக கணிக்க முடியும்? நாளை காலை..!” - களத்திலிருந்து அமைச்சர் உதயநிதி

இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர், “அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.

முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் | குறையும் மழை... சென்னையின் தற்போதைய நிலை என்ன? களத்திலிருந்து செய்தியாளர்கள்...

இன்னலில் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.

இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com