“கலைஞர் வச­னங்­களை பேசி நடித்­தி­ருக்­க­லாமோ என்ற குற்றஉணர்ச்சி..”- ரஜினி சொன்ன நெகிழ்ச்சி FlashBack

கலை­ஞர் நூற்­றாண்டு விழாவையொட்டி நடிகர் ரஜினிகாந்த் முரசொலி இதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கலைஞர் உடனான தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் அவர்.
கலை­ஞர் - ரஜினி
கலை­ஞர் - ரஜினிமுகநூல்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையைட்டி நடிகர் ரஜினிகாந்த் முரசொலி இதழில் கலைஞர் குறித்தும் அவர் செய்த பணிகள் குறித்தும் வாழ்த்தி சிறப்பு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அதில் கலைஞர் வசனங்களில் தான் நடிக்க இருந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார் ரஜினி. அந்த நெகிழ்ச்சி ஃப்ளாஷ்பேக், இங்கே:

“நான் 1980–ல் ஒரு திரைப்­ப­டத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யி­ருந்­தேன். அந்­தத் திரைப்­ப­டத்­தின் வச­னங்­கள் தயா­ரிப்­பா­ள­ருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்­பிப்­ப­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்­னால் தயா­ரிப்­பா­ளர் என்­னி­டம் வந்து ‘நான் உங்­க­ளுக்கு ஒரு மகிழ்ச்­சி­யான விஷ­யத்தை சொல்­கி­றேன்... நம் படத்­துக்கு கலை­ஞர் அவர்­கள் வச­னம் எழுத ஒப்­புக் கொண்­டார்’ என்று மிக­வும் மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார். எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது.

ரஜினியின் சிறப்பு கட்டுரை
ரஜினியின் சிறப்பு கட்டுரைமுரசொலி

எளி­மை­யான தமிழ் வச­னங்­களை பேசி நடிப்­ப­தற்கே திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கும் நான் கலை­ஞ­ரின் வச­னங்­களை பேசி நடிப்­பதா ??? நடக்­காத காரி­யம்... இதற்கு நான் கர்­நா­ட­கா­விற்கே ஓடிப்­போய் மறு­ப­டி­யும் பேருந்­தில் டிக்­கெட்விற்க ஆரம்­பித்து விட­லாம். தயா­ரிப்­பா­ள­ரி­டம் முடி­யவே முடி­யாது என்று கூறி­னேன்.

கலை­ஞர் - ரஜினி
"நல்ல கருத்துள்ள பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும்" - ‘தலைவர் 170’ குறித்து ரஜினி கொடுத்த அப்டேட்!

இதைக் கேட்ட தயா­ரிப்­பா­ள­ருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று. அவர் எழுத சம்­ம­தித்த பிற­கும் நீங்­கள் வேண்­டாம் என்று கூறி­யதை அவ­ரி­டம் நான் எப்­படி சொல்­வது என்று திண்­டா­டி­ னார். நான் அவரை சந்­திக்க ஒரு வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக்­கொ­டுங்­கள், நானே அவ­ரி­டம் சொல்­கி­றேன் என்று கூறி­னேன்.

ஜெயிலர் - ரஜினி
ஜெயிலர் - ரஜினிTwitter
கலை­ஞர் - ரஜினி
கலைஞர், எம்ஜிஆர் இருவருக்கும் அண்ணா முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? பத்திரிகையாளர் சமஸ் பேட்டி

கலை­ஞர் அவர்­களை சந்­திக்க கோபால­பு­ரத்­தில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்­திற்கு சென்­றேன். 1977 ல் மியூ­சிக் அகா­டமி அரு­கில் பார்த்த அதே முகம்.., அதே புன்­னகை... வாங்க என்று அவ­ருக்கே சொந்­த­மான அந்த கர­க­ரப்­புக் குர­லில் என்னை அழைத்து நலம் விசா­ரித்­தார். பின்பு ‘கதை­யைக் கேட்­டேன்... நன்­றாக இருக்­கி­றது. சிறப்­பாக வச­னங்­களை எழு­தி­ட­லாம்’ என்­றார்.

நான் அவரை சார் என்று தான் அழைப்­பேன். ‘சார் உங்­கள் வச­னங்­களை நான் பேச முடி­யாது. எளி­மை­யான தமிழை பேசவே நான் சிர­மப்­ப­டு­கி­றேன். அப்­படி இருக்­கும் போது உங்­கள் வச­னங்­களை எப்­படி நான் பேசு­வது? என்­னால் முடி­யாது. தவ­றாக நினைக்க வேண்­டாம்’ என்று கூறி­னேன். அதற்கு அவர் சிரித்து ‘எனக்கு யாருக்கு எப்­படி எழு­த­வேண்­டும் என்று நன்­றா­கவே தெரி­யும். சிவா­ஜிக்கு எழு­து­வது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்­டேன்.

அதே போல எம்.ஜி.ஆருக்கு எழு­து­வ­தைப்­போல சிவா­ஜிக்கு எழு­த­மாட்­டேன். உங்­கள் படங்­களை நான் பார்த்­துள்­ளேன். உங்­கள் ஸ்டைலில் நான் எழு­து­கி­றேன்’ என்று சர்வ சாதா­ர­ண­மாக கூறி­னார். எனக்கு என்ன சொல்­வ­தென்று புரி­ய­வில்லை.

திடீ­ரென்று ஒரு யோசனை தோன்­றி­யது. அந்த யோசனை அந்த நொடி­யில் எனக்கு தோன்­றி­ய­தற்கு நீ கெட்­டிக்­கா­ரன்டா என்று நானே மகிழ்ந்து ‘சார் படப்­பி­டிப்­பில் நாங்­கள் சில வச­னங்­களை மாத்­து­வோம் சில வச­னங்­களை நீக்­கு­வோம். அப்­படி இருக்­கும் போது உங்­கள் வச­னங்­களை மாத்­த­வும் முடி­யாது நீக்­க­வும் முடி­யாது. அது சரி­யா­ன­தா­க­வும் இருக்­காது’ என்று கூறி­னேன்.

அதற்கு அவர் ‘மாற்­றுங்­கள்.. ஒன்­றும் தவ­றில்லை, அது என்ன திருக்­கு­றளா?’ என்று கூறி­னார். எனக்கு ஒன்­றும் புரி­யா­மல் அமை­தி­யாக இருந்­தேன். இதை கவ­னித்த கலை­ஞர் சிரித்­துக்­கொண்டே ‘முன்­னால் யார் வச­னங்­களை எழு­தி­னாரோ அவரே எழு­தட்­டும்... நான் தவ­றாக நினைத்­துக்­கொள்ள மாட்­டேன்... நீங்­கள் கவ­லைப்­பட வேண்­டாம்...’ என்று கூறி தன் உத­வி­யா­ள­ரி­டம் தயா­ரிப்­பா­ளரை அழைக்­கும் படி கூறி­னார்.

கலை­ஞர் - ரஜினி
“திமுகவில் ஏன் இன்னும் சேரலைன்னு தந்தி போட்டார் கலைஞர்” - மநீம தலைவர் கமல்ஹாசன் சுவாரஸ்ய பேச்சு!
கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதிகோப்புப் படம்

தயா­ரிப்­பா­ள­ரி­டம் ‘என்­னு­டைய வச­னங்­களை பேசு­வ­தற்கு தனக்கு கஷ்­ட­மாக இருக்­கும் என்று ரஜினி கூறு­கி­றார். நான் அவ­ரு­டைய பாணி­யி­லேயே எழு­தித் தரு­கி­றேன் என்று சொன்­னேன். அவ­ரும் சம்­ம­தித்­தார். ஆனால் இந்த மாதம் 10ஆம் தேதி படப்­பி­டிப்பு என்று ரஜினி கூறு­கி­றாரே... நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்­துக் கொண்­டி­ருந்­தேன்... காலம் மிக­வும் கம்­மி­யாக இருக்­கின்­றது. ஆகை­யால் இந்­தப் படத்­திற்கு என்­னால் வச­னங்­கள் எழுத முடி­யாது. அடுத்த படத்­தில் பார்த்­துக் ­கொள்­ள­லாம்’ என்று கூறி தயா­ரிப்­பா­ளரை அனுப்பி வைத்­தார்.

தயா­ரிப்­பா­ள­ரின் மன­தை­யும் துன்­பு­றுத்­தா­மல், என்­னை­யும் திருப்­தி­ப­டுத்­திய அவ­ரு­டைய செய்­கை­யால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்­பும், மரி­யா­தை­யும் பல மடங்கு உயர்ந்­தது. ஆனா­லும் அவ­ரு­டைய வச­னங்­களை பேசி நடித்­தி­ருக்­க­லாமோ? தவறு செய்து விட்­டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்­றும் எனக்­குள் இருந்து கொண்டே இருக்­கின்­றது” என்றுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com