ஓசூர் - முன்விரோதத்தில் 2 இளைஞர்கள் கொலை: தலையை துண்டித்து தெருவில் வீசிய கொடூரம்!

ஓசூரில் இரண்டு இளைஞர்களை வெட்டி கொலை செய்து தலையைத் தெருவில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பொன்வண்ணன் மற்றும் பர்க்கத்
உயிரிழந்த பொன்வண்ணன் மற்றும் பர்க்கத் PT WEP

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பர்க்கத் (31). இவரது நண்பர் ஓசூர் பழைய வசந்த நகர்ப் பகுதியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்ற சிவா (27). இவர்கள் இருவரின் நண்பர் பக்கா என்கிற பிரகாஷ். இந்த பிரகாஷ், ஓசூர் பார்வதி நகர்ப் பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் 3 பேர் மீதும் ஓசூர் நகரக் காவல்நிலையங்களில் வழிப்பறி, திருட்டு மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் பக்கா பிரகாஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று விடுதலையான நிலையில், பக்கா பிரகாஷ்ஷை அவரது நண்பர்களான பர்க்கத் மற்றும் பொன்வண்ணன் என்ற சிவா ஆகிய இருவரும் காரில் சென்று ஓசூருக்கு அழைத்து வந்துள்ளனர். ஓசூர் வந்த மூன்று பேரும் பக்கா பிரகாஷ் வீடு உள்ள பார்வதி நகர்ப் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். பக்கா பிரகாஷை வீட்டிற்குள் அனுப்பி விட்டு பொன்வண்ணனும், பர்க்கத்தும் அங்குள்ள தெருவில் நடந்து வந்துள்ளனர்.

உயிரிழந்த பொன்வண்ணன் மற்றும் பர்க்கத்
ஈரோடு : மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்திய தந்தை; அதிர்ச்சி காட்சிகள்!

இதுகுறித்து தகவலறிந்த இவர்களின் முன் விரோதிகள், மூன்று பேரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக 15 பேர் கொண்ட மர்ம கும்பல் சாலையில் நடந்து சென்ற பொன்வண்ணன் மற்றும் பர்க்கத் இருவரையும் சராசரியாக வெட்டியுள்ளனர்.

வீடு உடைக்கப்பட்ட காட்சி
வீடு உடைக்கப்பட்ட காட்சி

இதில் பொன்வண்ணனின் தலையை வெட்டி தெருவில் வீசி சென்றுள்ளனர். பின்னர் பர்க்கத்தை துரத்திச் சென்றுள்ளனர். பர்க்கத் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த பக்கா பிரகாஷ் வீட்டின் சுவர் ஏறிக் குதித்துத் தப்பி ஓடி உள்ளார். உயிர் பிழைக்க நினைத்த பர்க்கத், பக்கா பிரகாஷின் வீட்டிற்குள் நுழைந்து கதவு மற்றும் ஜன்னல்களைப் பூட்டியுள்ளார். ஆனால் அந்த கும்பல் கதவு, ஜன்னல், மேற்கூரை ஆகியவற்றை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று பர்க்கத்தை சரமாரியாக வெட்டி கொலை கொலை செய்தனர்.

உயிரிழந்த பொன்வண்ணன் மற்றும் பர்க்கத்
புதிய தலைமுறை செய்தி எதிரொலி - திருச்செந்தூரில் ஆக்‌ஷன் எடுத்த அரசு... நிம்மதியான பக்தர்கள்!

இதில் மர்ம கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்த பக்கா பிரகாஷ் காவல்நிலையத்திற்குத் தஞ்சம் அடைந்தார்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு, ஒருவரின் தலை மட்டும் துண்டித்து தெருவில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com