‘கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி..’ பதக்கத்தோடு வந்த மகள்... நெகிழ்ந்த தந்தை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுவிட்டு, வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்த மகளை ஆரத்தழுவி, ‘கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி’ என்ற வரிகளுக்கு ஏற்றபடி ஆனந்தகண்ணீருடன் வரவேற்ற தந்தை!
Snehal Shinde with her father
Snehal Shinde with her fatherfile image

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய போட்டிகளில் கபடிப் பிரிவில் பங்கேற்று விளையாடிய இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. கடைசி நொடி வரை சீன அணியுடன் போராடிய இந்திய அணி 26 - 25 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கியது. இந்நிலையில், அணியில் பங்கேற்ற வீராங்கனை சினேகால் ஷிண்டே என்பவர், தன் சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு விமானத்தில் திரும்பினார். புனே வந்த அவரை வரவேற்பதற்காக அவரது தந்தை ஏர்ப்போர்ட்டில் காத்திருந்தார்.

வெற்றியுடன் திரும்பிய மகளை வரவேற்ற அந்த தந்தை, ஆரத்தழுவி ஆனந்த கண்ணீருடன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தந்தையும், மகளும் ஒருவருக்கு ஒருவர் பேச முடியாமல் நாதழுதழுக்க அன்பை பரிமாறிக்கொண்டனர்.

Snehal Shinde with her father
ஆசிய விளையாட்டில் 8 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தனது மகள் வென்ற பதக்கத்தையும் பத்திரிகையாளர் முன்பெருமையாக காட்டினார் தந்தை பிரதீப் ஷிண்டே. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com