\
Sarfaraz Khan sledges Dhananjaya de Silva
Sarfaraz Khan sledges Dhananjaya de Silvax

“பயப்படாம விளையாடுங்க ப்ரோ..” இலங்கை கேப்டனை ஸ்லெட்ஜ் செய்த சர்பராஸ்.. அடுத்த பந்தே OUT!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது.
Published on
Summary

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது டெஸ்டில், கொலம்போவில் இந்தியா 503 ரன்கள் குவித்து இலங்கையை அழுத்தத்தில் வைத்தது. 221/7 என போராடிய இலங்கை அணியின் கேப்டன் டி சில்வாவை, ஷார்ட்-லெக்கில் நின்ற சர்பராஸ் கான் தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்து மனஅழுத்தம் கொடுத்தார். “பயப்படாதே, நேராக விளையாடு” என挑விட்டு, அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட்டானார் டி சில்வா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல்லின் அற்புதமான சதம் மற்றும் மனவ் சுதரின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக 165 ரன்களில் வெற்றிபெற்றது இந்திய அணி.

ind vs sl test
ind vs sl testBCCI/ AP Photo

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொலம்போ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தேவ்தத் படிக்கல் (117) மற்றும் துருவ் ஜூரல் (115*) இருவரின் சதத்தின் உதவியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 503 ரன்கள் சேர்த்து டிக்ளார் செய்தது.

இந்தியாவை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 2ஆம் நாள் ஆட்டநேரமுடிவிலேயே 8 ரன்னுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்தது. அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்றுவரும் 3ஆம் நாள் ஆட்டத்தில் பந்துவீசிவரும் இந்திய அணி மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திவருகிறது. 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளுடன் 280 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை விளையாடிவருகிறது.

Sarfaraz Khan sledges Dhananjaya de Silva
”அந்த இலங்கை வீரர் என்ன சொன்னார் என்று தெரியாம பேசாதீங்க..” வைரலாகும் ஜெய்ஸ்வால் கமெண்ட்!

இலங்கை கேப்டனை ஸ்லெட்ஜ் செய்து அவுட்டாக்கிய சர்பராஸ்..

காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இலங்கை வீரர் டிக்வெல்லாவை ஸ்லெட்ஜ் செய்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட்டாக்கிய சம்பவம் நடந்தது. இருவருக்கும் இடையே ’முடிஞ்சா அடி; ஐபிஎல்லுக்கு கூட்டுட்டு போ வந்து அடிக்கிறன்’ என்ற உரையாடல் காரசாரமாக அமைந்தது. டிக்வெல்லாவுடன் மைண்ட் கேம் விளையாடிய ஜெய்ஸ்வால், அவருடைய விக்கெட் விழ முதல் காரணமாக இருந்தார். ஜெய்ஸ்வாலுடன் வாக்குவாதம் செய்தபின்னர் பந்தை பார்த்து விளையாடாமல் அடிக்க பேட்டை சுழற்றி வெளியேறினார் டிக்வெல்லா. அது இந்தியாவை ஒரு டிரா நோக்கி செல்லாமல் வெற்றிபெற உதவியது.

இந்தசூழலில் தான் ஜெய்ஸ்வால் போன்றே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் செயல்பட்ட இந்திய வீரர் சர்பராஸ், இலங்கை கேப்டன் தனஞ்செயாவை அவுட்டாக்க முக்கிய காரணமாக இருந்தார். ரிஷப் பந்திற்குப் பதிலாக மாற்று வீரராக களத்திற்குவந்த சர்பராஸ், ஷார்ட்-லெக் பகுதியில் ஃபீல்டிங் நின்றுகொண்டு இலங்கை கேப்டனை ஸ்லெட்ஜ் செய்ய ஆரம்பித்தார்.

Sarfaraz Khan sledges Dhananjaya de Silva
இந்திய அணியில் தேர்வாகாத ’கார்த்திகா’.. No.1 ரைடருக்கு மறுக்கப்பட்ட இடம்! வட இந்திய லாபி காரணமா?

35வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி சில்வா, அடுத்தபந்தை எதிர்கொள்ள அனைத்துபக்கமும் ஃபீல்டிங்கை பார்த்து கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டார். அப்போது பேசிய சர்பராஸ் கான், "ப்ரோ, அங்கே ஒன்றுமில்லை. நேராகப் பார்த்து விளையாடுங்கள், ஏன் இடதுபக்கமும் வலதுபக்கமும் பார்த்துகொண்டிருக்கிறாய். நீ நேரத்தை வீணடிக்கிறாய் ப்ரோ. பயப்படாதே.. தைரியமாக விளையாடு. நீதான் கேப்டன். இதற்காகத்தான் நீ காத்திருக்கிறாய்" என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். சர்பராஸ் கான் மைண்ட்கேம் விளையாடியதில் அடுத்த 2வது பந்தே கேட்ச் கொடுத்து 8 ரன்னில் வெளியேறினார் டி சில்வா.

முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் செய்த ஸ்லெட்ஜை தொடர்ந்து சர்பராஸ் கானும் அதே பாணியை பின்பற்றி விக்கெட்டை வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Sarfaraz Khan sledges Dhananjaya de Silva
அசைக்கமுடியாத 140 ஆண்டுகால சாம்ராஜ்ஜியம்.! இது நடந்தால்.. வங்கதேசம் காலடியில் கிரிக்கெட்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com