Pakistans Letter To ICC On India Boycott AT T20 World Cup
ind, wc, pakx page

IND போட்டி புறக்கணிப்பு | 'ஃபோர்ஸ் மஜூர்' விதியை பயன்படுத்திய பாகி.. விளக்கம் கேட்கும் ஐசிசி!

பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Published on

பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம் அளிக்கவில்லை எனில் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அது தொடர்பாக ஐசிசி விளக்கம் கேட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் இன்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம் அளிக்கவில்லை எனில் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அது தொடர்பாக ஐசிசி விளக்கம் கேட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அளித்திருந்த கடிதத்தில், 'ஃபோர்ஸ் மஜூர்' (force majeure) பிரிவை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த விதி என்பது, ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளைக் குறிக்கிறது. 'ஃபோர்ஸ் மஜூர்' விதியை வலியுறுத்துவதன் மூலம், அந்தச் சூழ்நிலை அசாதாரணமானது மற்றும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவுடன் விளையாடாமல் இருப்பதற்கு அவர்களிடம் வேறு எந்தக் காரணமும் இல்லாததால், இதுவே அவர்களின் கடைசி வழியாகப் பார்க்கப்படுகிறது.

Pakistans Letter To ICC On India Boycott AT T20 World Cup
pakistanx page

இருப்பினும், குறிப்பிடப்படாத காரணங்களுக்காக, ஓர் அணி களமிறங்க மறுக்கும் இது ஒரு முன்னோடியில்லாத சூழ்நிலை என்பதால், 'ஃபோர்ஸ் மஜூர்' விதியின் விளக்கம் எவ்வாறு அமையும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது. இதைத்தான் ஐசிசியும் பாகிஸ்தானிடம் கேட்டுள்ளது. போட்டியில் பங்கேற்காமல் இருக்க முடிவு செய்வதற்கு முன்பு, சூழ்நிலையின் தாக்கத்தைக் குறைக்க, மாற்று வழிகளை ஆராய அல்லது விலக்கு கோர பிசிபி என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டது என்பதை நிரூபிக்குமாறு ஐசிசி கேட்டுள்ளது.

Pakistans Letter To ICC On India Boycott AT T20 World Cup
T20 WC | இந்தியாவுக்கு எதிரான போட்டி.. பின்வாங்கும் பாகிஸ்தான்? உள்ளே நுழைந்த இலங்கை!

'ஃபோர்ஸ் மஜூர்' என்றால் என்ன?

'ஃபோர்ஸ் மஜூர்' பிரிவை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய நிபந்தனைகள், திட்டமிடப்பட்ட போட்டியில் இருந்து விலகுவதை நியாயப்படுத்தத் தேவையான ஆதாரங்கள் ஆகியவற்றையும் ஐசிசி கோடிட்டுக் காட்டியுள்ளது. பாகிஸ்தானின் இந்தப் பிரிவைப் பயன்படுத்தும் நடவடிக்கை செல்லாதது என நிரூபிக்கப்பட்டால், சாத்தியமான இழப்பீடுகளை எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தானுக்கு ஐசிசி எடுத்துரைத்துள்ளது. கொழும்பு ஒரு நடுநிலையான இடம் என்பதால், இதில் ஒருவித தெளிவின்மை உள்ளது. மேலும், பி.சி.பி தனது போட்டிகளை இலங்கையில் விளையாட ஒப்புக்கொண்டிருப்பதால், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்பதே ஐசிசியின் கேள்வியாக உள்ளது.

Pakistans Letter To ICC On India Boycott AT T20 World Cup
pcb, iccx page

'ஃபோர்ஸ் மஜூர்' என்பது ஓர் ஒப்பந்த விதி ஆகும். இது போர், இயற்கைப் பேரழிவுகள், அரசாங்க நடவடிக்கைகள் அல்லது பொது அவசர நிலைகள் போன்ற, ஒரு தரப்பின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அசாதாரண நிகழ்வுகளால், அதன் கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. இந்தப் பிரிவு பொருந்த வேண்டுமானால், பாதிக்கப்பட்ட தரப்பு அந்த நிகழ்வு கணிக்க முடியாதது மற்றும் தவிர்க்க முடியாதது என்பதையும், அதன் தாக்கத்தைக் குறைக்க அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும். வெறும் சிரமம் அல்லது அரசியல் விருப்பம் பொதுவாக இந்தச் சோதனையை திருப்திப்படுத்தாது.

Pakistans Letter To ICC On India Boycott AT T20 World Cup
T20 WC | இந்திய போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்.. ICC எத்தகைய தடைகளை விதிக்கும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com