கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்: பிரதமர் மோடி, அமித்ஷா, தோனி பெயரில் 3000 விண்ணப்பங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்ட நிலையில் 3000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
பிரதமர் மோடி, அமித்ஷா
பிரதமர் மோடி, அமித்ஷாpm modi

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளம்மிங் போன்றோரிடம் பயிற்சியாளர் பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை மறுத்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைமை பயிற்சியாளர் பதவி தொடர்பாக தாங்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யாரையும் அணுகவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் அப்பொறுப்புக்கு வருபவர்கள், இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புகளை முழுமையாக தெரிந்த ஒருவராக இருக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்
பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்ட்விட்டர்

இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கொல்கத்தா அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர் பெயரும் மிகத்தீவிரமாக அடிபட்டன. இத்தகைய சூழலில்தான், “பயிற்சியாளர் பணி தொடர்பாக கவுதம் கம்பீருக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை; அவ்வாறு உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வார்” என்ற தகவலும் வெளியானது.

பிரதமர் மோடி, அமித்ஷா
“நீங்க ஒரு ஜோக்கர்..” கோலி குறித்து சர்ச்சை பேச்சு! நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்திய பீட்டர்சன்!

அதேசமயத்தில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் நேற்று (27/05/24) முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தோனி, டெண்டுல்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்களுடன் கிட்டத்தட்ட 3000 விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்றுள்ளது.

Modi & Amit shah
Modi & Amit shahFile Image

பிசிசிஐ மே 13 ஆம் தேதி Google forms-ல் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களைப் பெறுவதாக அறிவித்திருந்தது. இதில் போலி விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, சேவாக், ஹர்பஜன் சிங், டெண்டுல்கர் போன்றோரது பெயர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதில் உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனரா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா
'KKR கோப்பை வென்றிருக்கலாம்.. ஆனால் நாம்தான்' தோற்ற SRH வீரர்களிடம் நம்பிக்கையாக பேசிய காவ்யா மாறன்!

இதற்கு முன்பும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களைப் பெற்றபோது 5000 விண்ணப்பங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. Google formsல் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான காரணம் விண்ணப்பதாரர்களின் பெயர்களை ஒரே தாளில் ஆராய்வது எளிது என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா
நியூயார்க் சென்றடைந்த இந்திய அணி.. வேறு நாட்டில் தனிமையில் விடுமுறையை கழிக்கும் ஹர்திக்.. பின்னணி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com