plane crashes in rajasthan pilots found dead
rajasthan plane crashx page

ராஜஸ்தான் | விபத்துக்குள்ளான போர் விமானம்.. 2 விமானிகள் உயிரிழப்பு! ஒரே ஆண்டில் 5வது விபத்து

ராஜஸ்தானில் ஜாகுவார் போர் விமானம் இன்று விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
Published on

விழுந்து நொறுங்கிய விமானம்.. சிதறிக்கிடந்த உடல்கள்..

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமத்திற்கு அருகே, ஐஏஎஃப் ஜாகுவார் போர் விமானம், இன்று ஒரு வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். இன்று மதியம் 1:25 மணியளவில் அந்த விமானம் வயலில் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் காவல்துறை அதிகாரியான ராஜல்தேசர் கம்லெஷ் PTIயிடம் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, அப்பகுதியில் பீதி பரவியது.

plane crashes in rajasthan pilots found dead
rajasthan plane cashx page

வானத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வயல்களில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை எழுந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்தால் அருகிலுள்ள வயல்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதை தாங்களாகவே கட்டுப்படுத்த முயன்றதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக IAF தெரிவித்துள்ளது.

plane crashes in rajasthan pilots found dead
அகமதாபாத் விமான விபத்து | முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு.. விரைவில் தகவல்!

இந்த ஆண்டு இதுவரை, IAF ஐந்து விமான விபத்துக்களைக் கண்டுள்ளது.

முதலாவது, பிப்ரவரி 6ஆம் தேதி, குவாலியரில் இருந்து புறப்பட்ட பிறகு மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி அருகே மிராஜ் 2000 விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாவது, மார்ச் 7ஆம் தேதி, அம்பாலாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானமும் வழக்கமான விமானப் பயணத்தில் இருந்தது. பின்னர் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று கூறப்பட்டது. அதிலிருந்த விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது, அம்பாலா ஜாகுவார் விபத்து நடந்த அதேநாளில், மார்ச் 7 அன்று, கிழக்குப் பகுதியில் உள்ள பாக்டோக்ரா விமான தளத்தில் ஒரு AN-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. இருப்பினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

நான்காவது, ஏப்ரல் 2ஆம் தேதி, குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அருகே மற்றொரு ஜாகுவார் இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் இறந்தார், மற்றவர் உயிர் பிழைத்தார்.

ஐந்தாவது, ஏப்ரல் 2 ஜாம்நகர் ஜாகுவார் விபத்தைத் தொடர்ந்து இன்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது, இது ஏழு மாதங்களில் விபத்துகளின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியது.

இந்திய விமானப்படை, தற்போது ஆறு ஜாகுவார் ஆழமான ஊடுருவல் தாக்குதல் போர் விமானப் படைப்பிரிவுகளை இயக்கி வருகிறது. இதன்மூலம் இந்திய விமானப்படை விமானிகள் தங்கள் திறமை மற்றும் பயிற்சிக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டாலும், விமான விபத்துகள் கவலை அளிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2017 முதல் 2022 வரை 20 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாகவும், ஏழு ஹெலிகாப்டர்கள், ஆறு பயிற்சி விமானங்கள் மற்றும் ஒரு போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

plane crashes in rajasthan pilots found dead
விமான விபத்து | சட்ட விளக்கம் இல்லாத ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதா ஏர் இந்தியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com