டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவு | “இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்!” - முதல்வர் அறிக்கை

"அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!"- முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் முகநூல்

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி தெரிவித்துள்ளனர். “பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
பெரியார், டிஎம் கிருஷ்ணா குறித்த மோசமான விமர்சனம் - பாடகர்கள் ரஞ்சனி காயத்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில், இவர்களின் கருத்துக்கள் பலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்.பி.கனிமொழி உட்பட பலர் தங்களது கண்டனத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

tm krishna
tm krishna

அந்தவரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தற்போது தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், “சிறந்த பாடகர் டி.எம் கிருஷ்ணா அவர்கள் The Music Academy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
“கடிதத்தின் நோக்கம் குறித்து சந்தேகம்” - ரஞ்சனி காயத்ரி கருத்துக்கு மியூசிக் அகாடமி தலைவர் வருத்தம்

திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம் கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com