ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி 113 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
சந்திரபாபு, ஜெகன் மோகன்
சந்திரபாபு, ஜெகன் மோகன்எக்ஸ் தளம்

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலுடன் சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 25 இடங்களையும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இங்கு ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாரணாசியில் மோடி பின்னடைவு.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்! அதிர்ச்சியில் பாஜக!

சந்திரபாபு, ஜெகன் மோகன்
4ஆம் கட்ட தேர்தல்: ஆந்திரா சித்தூரில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com