"போன பிறகுதான் சைடிஸ் வருமா" தாமதமானதால் அடிதடி.. கேண்டீன் மாஸ்டரை தாக்கிய போதை இளைஞர்கள்!

சைடிசாக ஆர்டர் செய்த முட்டைப் பொடிமாஸ் வர தாமதமானதால் பாரில் இருந்த கேண்டின் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.. எங்கு நடந்தது? முழு விவரத்தைப் பார்க்கலாம்.
கேண்டீன் மாஸ்டரை தாக்கிய இளைஞர்கள்
கேண்டீன் மாஸ்டரை தாக்கிய இளைஞர்கள்புதியதலைமுறை

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக்கடையுடன் தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் மூன்று இளைஞர்கள் மது அருந்த சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கு மது அருந்திய அவர்கள், சைடிஷாக முட்டை பொடிமாஸ் ஆர்டர் செய்துள்ளனர்.

கேண்டீன் மாஸ்டரை தாக்கிய இளைஞர்கள்
வேலூர் | கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவின் உடல்... நல்லடக்கம் செய்த காவலர்!

சைடிஷ் வருவதற்கு தாமதமான நிலையில் மூவரும் கேண்டின் உள்ளே சென்று அங்கிருந்த காசாளரிடம் நாங்கள் மது அருந்திவிட்டு சென்று பிறகு தான் சைடீஷ் தருவீர்களா என வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதற்கு அவர், கேண்டின் மாஸ்டரை கேளுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, சமையல் செய்து கொண்டிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமாரிடம் கேட்ட போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. தொடர்ந்து, இளைஞர்கள் கேண்டின் மாஸ்டர் அஜித்குமாரை சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இது அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து, சம்பவம் தொடர்பாக வல்லியனூர் காவல் நிலையத்தில் அஜித்குமார் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸாரும் சிசிடிவி காட்சிகளை கொண்டு கேண்டின் மாஸ்டரை தாக்கிய இளைஞர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கேண்டீன் மாஸ்டரை தாக்கிய இளைஞர்கள்
வேலூர் | கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவின் உடல்... நல்லடக்கம் செய்த காவலர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com