37 வயது பெண் கொலை | ”அந்த உண்மையை மறைத்ததால் கொன்றுவிட்டேன்” - வடமாநில இளைஞர் கொடுத்த வாக்குமூலம்!
விருத்தாச்சலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 38. இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சிறப்பு குழந்தை ஆவார்.
மேலும் சரஸ்வதி கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து தன் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவர் கணேசமூர்த்தி கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். பிள்ளைகள் இருவரும் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சரஸ்வதி தன் பிள்ளைகளுடன் கும்மிடிப் பூண்டி சென்று கணவருடன் இருந்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாக தெரிகிறது.
சரஸ்வதியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது ஏன்?
கடந்த 18 ஆம் தேதி பிள்ளைகளுடன் கணவரை பார்க்க சென்ற சரஸ்வதி அவர்களை விட்டு விட்டு இரவு கொளத்தூரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் கணேசமூர்த்தி தன் மனைவி சரஸ்வதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கணேசமூர்த்தி மீண்டும் மனைவி சரஸ்வதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து தன் நண்பர்களான துரைராஜ், தேவசகாயம் ஆகியோரிடம் தகவலை கூறி வீட்டிற்கு சென்று மனைவியை பார்த்து விட்டு வருமாறு தெரிவித்துள்ளார்.
சரஸ்வதியின் உடலை அழுகிய நிலையில் கண்டெடுத்த போலீசார்
சரஸ்வதி வசிக்கும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவர் சரஸ்வதி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது கதவு சாத்திய நிலையில் இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சரஸ்வதி உடல் அழுகிய நிலையில் குடல் வெளியே வந்தவாறு இறந்து கிடப்பதை பார்த்து உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து சரஸ்வதி கணவருக்கு போலீசார் தகவல் தெரிவித்ததுடன் சரஸ்வதி இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதி பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம், அவர் அணிந்திருந்த அரை சவரன் தங்க மோதிரம் மற்றும் செல்போன் திருடு போனது தெரியவந்தது.
சரஸ்வதி எப்படி இறந்தார்? விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்
மேலும் சரஸ்வதி புகைப் பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட அனைத்து விதமான போதை பழக்கத்திற்கு அடிமையானதும், கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த சரஸ்வதியை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும், பின்னர் அவர் சில நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சரஸ்வதி எப்படி இறந்தார்? அவரது பைக், மோதிரம், செல்போன் ஆகியவை காணாமல் போகியுள்ளதால் அவரை யாரேனும் கொலை செய்து பொருட்களை திருடி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்த கான்பூரைச் சேர்ந்த மொய்தீன் அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.
கைதான இளைஞரின் வாக்குமூலம்
அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், மொய்தீன் கூறிய விஷயங்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைதான மொய்தீன் தன்னுடைய வாக்குமூலத்தில், “நான் உண்மையாக சரஸ்வதியை காதலித்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் கோபமடைந்து மதுபோதையில் அடித்தேன். அடி தாங்க முடியாமல் அவள் உயிர் இழந்து விட்டார்” என்று கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், “சரஸ்வதி திருமணமானதை மறைத்து தனது கணவரை அண்ணன் எனக்கூறி என்னை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருப்பதற்காக கொளத்தூர் பகுதியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம். சம்பவத்தன்று இருவரும் அதிக அளவில் மதுபானம் அருந்திய நிலையில், சரஸ்வதிக்கு செல்போன் அழைப்பு வந்தது. அது குறித்து கேட்டப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சரஸ்வதியை தாக்கியதில் உயிரிழந்துவிட்டார்.
சரஸ்வதி திருமணம் ஆனவர் என தெரியாது
மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கி குடும்பத்தினருக்கு கூட அனுப்பாமல் அதனை சரஸ்வதிக்காக செலவு செய்தேன். நான் தாக்கியதில் சரஸ்வதி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் எடுத்து கொண்டு தப்பி யோடிவிட்டேன். அவர் பாலியல் தொழிலாளி என்பதோ அல்லது திருமணம் ஆனதோ எனக்கு எதுவும் தெரியாது. ஏமாற்றியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன்” என போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.