\
Ajithkumar
AjithkumarVijay

அஜித் சாரின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை! - இயக்குநர் விஜய் புகழாரம் | Ajith

அசாதாரண சவாலை அஜித் சார் எதிர் கொள்வதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையான தருணம். இந்த தருணத்தை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றியது மோட்டார் விளையாட்டு உலகில் அஜித் சாரின் சாதனைதான். 
Published on
Summary

உலகின் மிகப் புகழ்பெற்ற 24 Hours of Le Mans எண்டூரன்ஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேடையில் போட்டியிட்ட முதல் இந்திய அணியாக பெருமை பெற்றுள்ளது. மிச்செலின் லெ மான்ஸ் கப் LMP3 பிரிவில் அஜித், கார்த்திக் நரேன், ஆதித்யா பட்டேல், ரோமேன் வோஸ்னியாக் ஆகியோர் இந்தியாவின் கனவுகளை உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ளனர்.

நடிகர் அஜித் சினிமா தாண்டி கார் பந்தயங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சவாலான எண்டூரன்ஸ் கார் பந்தயமான 24 Hours of Le Mans போட்டியில், அஜித் குமார் ரேசிங் கலந்து கொண்டது. இந்த ஐகானிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய அணியாக பெருமை பெற்றுள்ளது. இப்போட்டியை கண்டுகளித்த இயக்குநர் விஜய் தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். அதில் "வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) போட்டியை நேரில் கண்டு, அதை பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. 1923ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் 24 மணி நேர லெ மான்ஸ் வெறுமனே கார் பந்தயம் மட்டுமல்ல! உலகின் மிகவும் பெருமை மிக்க, கடினமான மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். 

Ajith
Ajith

மோட்டார் விளையாட்டின் புகழ்பெற்ற டிரிபிள் கிரவுன் போட்டிகளான இண்டியானாபோலிஸ் 500 மற்றும் மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, லெ மான்ஸ் தனக்கென ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. மோட்டார் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், லெ மான்ஸில் போட்டியிடுவது என்பது திறமையும் துணிச்சலும் சோதிக்கப்படும் சவாலான இடம். அத்தகைய அசாதாரண சவாலை அஜித் சார் எதிர் கொள்வதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையான தருணம். இந்த தருணத்தை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றியது மோட்டார் விளையாட்டு உலகில் அஜித் சாரின் சாதனைதான். உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர லெ மான்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு தொடராக விளங்கும் மிச்செலின் லெ மான்ஸ் கப் சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்றது இந்திய மோட்டார் விளையாட்டிற்கு முக்கிய மைல் கல்லாகும். லெ மான்ஸ் போட்டி வாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற 3 மணி நேர கடினமான எண்டூரன்ஸ் பந்தயத்தில் அஜித் ரெடண்ட் ரேசிங் போட்டியிட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேடையில் போட்டியிடும் முதல் இந்திய அணியாக அஜித் சார், கார்த்திக் நரேன் சார், ஆதித்யா பட்டேல் மற்றும் ரோமேன் வோஸ்னியாக் ஆகியோர் இந்தியாவின் கனவுகளையும் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ளனர்.

Ajith
Ajith
Ajithkumar
நட்சத்திர அந்தஸ்த்திற்கு நான் Addict ஆனேன்! - சமந்தா | Samantha | Maa Inti Bangaram

இது அஜித் சாரின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கும் வரலாற்றுத் தருணமாகும். எதிர்காலத்தில் இந்தியாவின் சர்வதேச மோட்டார் விளையாட்டு பயணம் குறித்து பேசப்படும் போது, லெ மான்ஸில் அஜித் சார் பங்கேற்றது முக்கிய திருப்புமுனை சாதனையாக நினைவுகூரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் மிகச் சிறந்த விளையாட்டு மேடையில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை உருவாக்கியதை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்த அஜித் சாருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், லெ மான்ஸ் மிச்செலின் கப் போட்டியின் LMP3 பிரிவில் அஜித் ரேடெண்ட் ரேசிங் அணியில் கார் எண் 36-ஐ ஓட்டிய கார்த்திக் நரேன் சார் மற்றும் ஆதித்யா பட்டேல் அவர்கள் Pro பிரிவில் 13-வது இடத்தை (P13) பெற்றனர். கார் எண் 16-ஐ ஓட்டிய அஜித் சார் மற்றும் ரோமேன் வோஸ்னியாக் அவர்கள் Pro-Am பிரிவில் 9-வது இடத்தை (P9) பெற்று சிறப்பான முடிவை பதிவு செய்தனர். அஜித் சார் மற்றும் அவரது அணியினருக்கு மேலும் பல வெற்றிகள், மறக்க முடியாத பந்தய அனுபவங்கள் மற்றும் தொடர் சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ajithkumar
அவரை முதலமைச்சர் ஆக்குவது தான் கதை! - ராதா ரவி | Radha Ravi | Makkal Thalaiva
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com