சிறுவன் மகவூ ராதே
சிறுவன் மகவூ ராதே திருப்பத்தூர்
தமிழ்நாடு

திருப்பத்தூர்: தந்தையுடன் டிராக்டர் பயணம்... தவறி விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

யுவபுருஷ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக நிலம் உள்ள நிலையில், தனது விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது தனது 5 வயது மகன் மகவூ ராதேவையும் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு டிராக்டரை ஓட்டி வந்துள்ளார்.

உழுதுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, சிறுவன் டிராக்டரின் பின்பக்க இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் மகவூ ராதே

கிராமப்புரங்களில் பலரும் இதுபோன்று சிறுவர்களை டிராக்டரில் உட்கார வைத்து உழுது வரும் நிலையில், சிறுவன் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளை டிராக்டரில் உட்கார வைக்க வேண்டாம் என்ற குரலும் வலுத்து வருகிறது.