police jayakumar
police jayakumar pt
தமிழ்நாடு

வாணியம்பாடி: சிறை வளாகத்திலேயே மது அருந்திய தலைமை காவலர்.. வீடியோ வைரலானதால் பாய்ந்த நடவடிக்கை!

யுவபுருஷ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் வாணியம்பாடி கிளைச்சிறைசாலை உள்ளது. இந்த சிறையில் தற்போது 35 கைதிகள் உள்ள நிலையில், ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் சுழற்சி முறையில் சிறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த கிளைச்சிறைசாலையில் தலைமை காவலராக பணியாற்றும் ஜெயகுமார் என்பவர், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் கைதிகளின் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும், மேலும் அவர்களை இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி வர கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, ஜெயகுமார் பணியில் இருக்கும் போதே சிறைசாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த விவகாரத்தில் ஜெயகுமார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிறை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.