“தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை” - மியாட் மருத்துவமனை அறிக்கை

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது” - மியாட் மருத்துவமனை அறிக்கை
‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’  - மியாட் மருத்துவமனை அறிக்கை
‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’ - மியாட் மருத்துவமனை அறிக்கைபுதிய தலைமுறை

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைபாடு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரின் உடல் நிலை சீராக இருக்கிறது என்றே மருத்துவமனை தெரிவித்திருந்தது. இயற்கையாகவே சுவாசிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவரின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மருத்துவ அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மருத்துவ அறிக்கை

அந்த அறிக்கையில், “திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நுரையீரல் சளி போன்ற சில பாதிப்புகள் காரணமாக கடந்த 18ஆம் தேதி இரவில், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கபட்டிருந்தார்.

‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’  - மியாட் மருத்துவமனை அறிக்கை
தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி... உடல்நிலை எப்படி இருக்கிறது?

அப்போது இவருக்கு மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருப்பினும், அவர் தாமாகவே சுவாசித்து வருவதோடு, உடல்நிலை சீராக உள்ளதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அப்படியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com