கொலைக் குற்றவாளி என்கவுன்டர் pt desk
குற்றம்

மதுரை | கொலைக் குற்றவாளி என்கவுன்டர்... காவல் ஆணையர் விளக்கம்... - நடந்தது என்ன?

22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுபாஸ் சந்திர போஸ் என்ற ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவைச் சேர்ந்தவர்கள் வீகே. குருசாமி, ராஜபாண்டி ஆகிய நண்பர்கள் இருவரும் மதுரையில் குடியேறி அரசியலில் நுழைந்தது முதல் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த 20 ஆண்டு காலமாக இருதரப்பிலும் பழிக்குப் பழியாக 22 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளனர்.

வீகே. குருசாமி,

இரு தரப்பிலும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்து வந்த நிலையில், மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

வெள்ளைக்காளி

இதனிடையே மதுரையைச் சேர்ந்த குட்ட பாண்டி என்பவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து இந்தக் கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், நந்தகுமார், நவீன்குமார், கார்த்திக், அசன் ஆகிய 7 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர் இதைத் தொடர்ந்து கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ்சந்திர போஸை தனி படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை காரில் விளாச்சேரி பகுதியில் சுற்றிய சுபாஷ்சந்திர போஸை, தனிப்படை போலீசார் விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவ, தன்னிடமிருந்த வாளை எடுத்து காவல்துறையினரை நோக்கி வீசியுள்ளார். அதில் தலைமை காவலர்கள் இரண்டு பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சுபாஷ்சந்திர போஸ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல் ஆய்வாளரை நோக்கி சுட்டுள்ளார். இதில் நூலிழையில் தப்பிய காவல் ஆய்வாளர் பூமிநாதன் சுபாஸ்சந்திர போஸை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

காவல் ஆணையர்

அப்போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சுபாஷ்சந்திர போஸ் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இந்த என்கவுண்டர் சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் என்கவுண்டர் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து சுபாஸ் சந்திர போஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தகவல் அளித்த காவல் ஆணையர் லோகநாதன்...

சுபாஷ்சந்திர போஸ் மீது கிளாமர் காளி கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். அப்போது அவர் துப்பாக்கியால் காவல் ஆய்வாளரை சுட முயன்ற போது பாதுகாப்பு கருதி காவல் ஆய்வாளர் சுட்டதில் சுபாஷ்சந்திர போஸ் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட முயன்றபோது ஆய்வாளரையே சுட முயன்றதால் என்கவுண்டர் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.