ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய 5 வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு. செல்போனில் புகைப்படம் எடுத்த சில நிமிடங்களில் நடந்த சோக சம்பவம். என்ன நடந்தது. விரிவாக பார்க்கலாம்.
திருச்செந்தூர் அருகே தாமிரபரணி கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் கிராமத்தில் 2வது நாளாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.