நெல்லை: கனமழையால் திறக்கப்பட்ட ஒரு லட்சம் கனஅடி நீர்.. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

நெல்லை தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் நிற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com