நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது திமுகவுக்குதான் பாதிப்பு என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
“சூரசம்ஹாரத்தில் கம்சனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல, எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்” என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறார். திமுகவினர் தங்கமாக தூக்கிக் கொடுத்தாலும் தமிழக மக்கள் ...