அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
“12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்” என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.