நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
“இப்போது நடைபெறவுள்ள தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. 5 ஆண்டுகள் கழித்து மற்றொரு தேர்தல் வருமா” என்ற கவலை இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
“இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா? என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது” என்று காரைக்குடி அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ப.சிதம்பரம் பேசினார்.