பெருமாள் பூமாதேவியை காக்கும் பொருட்டு வராக அவதாரம் எடுத்து, பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாட்சன் என்ற அசுரனுடன், போர் செய்து பூமியை காப்பாற்றினார்.
இத்திருத்தலத்தில் உத்தராயணம், தஷிணாயணம் என்று இரு வாசல்கள் உண்டு. இது வராக ஷேத்திரம். பெருமாளின் திருநாமம் புண்டரீகாட்சன். தாயாரின் திருநாமம் பங்கயச்செல்வி , செண்பகவல்லி என்றும் அழைக்கப்படுகிறாள்.