“See you in நம்ம ஊரு Soon” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா ஸ்பந்தனா!

நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டதாக வதந்தி பரவியதையடுத்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர்.

நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் இறந்துவிட்டார் என இன்று காலை திடீரென வதந்தி பரவிய நிலையில், பின் அது போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுதொடர்பாக X சமூகவலைதளத்தில் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், “திவ்யாவுடன் பேசினேன். அவர் நலமுடன் உள்ளார். செய்தி வெளியானதையடுத்து ஃபோன்கால் வரும்வரை, ஜெனிவாவில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார்” என்று கூறியிருந்தார். அத்துடன் போலி செய்தி பரப்பியோரை சாடியும் இருந்தார்.

இந்நிலையில் அச்செய்தி போலிதான் என்பதை உறுதிசெய்யும் வகையில், பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் என்பவர், சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டிருக்கிறார். அதில் அவர், “திவ்யாவை ஜெனிவாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி. பெங்களூரு மீதான் எங்கள் அன்பு உட்பட நிறைய விஷயங்களை பேசினோம்” எனக்கூறி, அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு திவ்யா இப்போது பதிலளித்துள்ளார். அதில் “See you in நம்ம ஊரு Soon” என கூறியுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com